முதிர் கன்னிகளை உருவாக்கும் பஞ்சாங்க ஜோதிடர்கள்.... இரண்டு நாள் முன்பு எனது உறவினருடன் அவருடைய மகனுக்காக அவரின் குடும்ப ஜோதிடரிடம் திருமணப்பொருத்தம் பார்க்க சென்றிருந்தேன்..பேச்சு வாக்கில்.. உங்களைப்போன்ற ஜோதிடர்களால்தான்.. தமிழ் நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் ஆவதே காலதாமதம் ஆகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செவ்வாய் தோசம் என்ற ஒன்றைக்கூறுகிறீர்கள்.. அடுத்த மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் ராக்கெட் போய் செவ்வாயில் போய் இறங்கப்போகிறது..இன்னும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றேன்..அதற்கு அவர் சிரித்துக்கொண்டே... சார் உண்மையில் செவ்வாய் தோசம் என்பதே..சாமியர்களுக்கானது.. செவ்வாய் தோசம் உள்ளவரை ஒரு மடத்தின் தலைவராக நியமிக்கக்கூடாதாம்.. ஏன் என்றால் செவ்வாய் காமாந்திரகிரகமாம்.. இந்த கிரகம் உள்ளவரை ஆன்மீககுருவாக ஆக்கினால்( நித்யானந்த போல) அவர் சன்னியாசியாக இருக்கமாட்டார்..என்பதாலேயே.. அப்படிச்சொல்லப்பட்டது.. இது எப்படியோ பெண்களுக்கு என்று மாறிவிட்டது என்றார்.. நாங்கள் கொண்டுசென்றிருந்த மூன்று பொருத்தங்களையும் பார்த்தார். இது ஏற்கனவே நான் மனோஜ் ஜெராக்சில் அஸ்ட்ரோ விசன் என்ற கணிப்பொறி ஜாதகம் மூலம் பொருத்தம் பார்த்த பிரிண்ட் அவுட். இதில் 3 பெண்களின் ஜாதகமும் 14 க்கு 13 பொருத்தங்கள் என வந்திருந்தது. உத்தமம். திருமணம் செய்யலாம் என்றும் இருந்தது..ஆனால் அவர் இந்த மூன்றையும் பார்த்தார். தன் மேஜையின் மீதிருந்த பஞ்சாங்கத்தில் தேடினார்..கடைசியில்...ஆணின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு ஆயில்யம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம் சேராது என்று எதோதே கட்டங்களைக்கூறி மூன்று ஜாதகத்தையும் தள்ளுபடி செய்துவிட்டார். பின் கிருத்திகை நட்சரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள் என்று ஒரு 10 நட்சத்திரங்களைக்கொடுத்தார். அதில் ஆயில்யம் ,விசாகம் மற்றும் மூலம் இல்லை. நேற்று அவர் வைத்திருந்த ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் என்ற புத்தகத்தை ஏற்கனவே சென்ற மாதம் ஒருமுறை போனபோது பணம் கொடுத்து வாங்கிவந்திருந்தேன்.. அதில் தேடினேன்.. 92-ம் பக்கத்தில் ஜாதக பொருத்தம் ரெடி அட்டவணையில் ஆணின் கிருத்திகை பாதம் 1க்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்களில் ஆயில்யம் உத்தமம் என்றும், மூலமும், விசாகமும் மத்திமம் என்று உள்ளது. அதாவது இந்த மூன்று நட்சத்திரங்களும் பொருந்தும்.. சரி இணையத்தில் போய் ஜாதகப்பொருத்தம் என்று போட்டால் பல ஜோதிடர்கள் தங்கள் இணையத்தில் பதிவிட்டதில்... கிருத்திகை பாதம் 1 க்கு சித்திரை பாதம் 3,4 மற்றும் அவிட்டம் 1,2 என்று இரண்டு மட்டுமே சேரும் என்று போட்டுள்ளனர். இன்னும் சிலவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பொருந்தும் என்று போட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக போட்டு... பொதுமக்களை ஏமாற்றுகின்றதை அறியமுடிகிறது. என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தில்.. இருந்ததை படித்தபோது அதர்ச்சியாக இருந்தது.. இந்த பிராமனீயம் பெண்களை இரண்டாம் பட்சமாக ஆணுக்கு கீழ், ஜாதகத்திலும் வைத்து புரட்டு செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. அதாவது மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் ஆண்களுக்கு எந்த நட்சத்திரமும் தோஷமில்லையாம்..ஆனால் பெண்களுக்கு மட்டும் ஆயில்யம் 1ம் பாதம் மாமியாருக்கு ஆகாது, மூலம் 1ம் பாதம் மாமனாருக்கு ஆகாது(ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று டயலாக்). விசாகம் 4ம் பாதம் மைத்துனருக்கு ஆகாது. கேட்டை 1ம் பாதம் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்றுள்ளது. ஆக பெண்களின் நட்சரத்திற்கு மட்டுமே தோஷம்.. ஆண்களுக்கு இல்லை..ஏன்..? ஜோதிடம் என்பது மதத்தைப்போல ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது..அதனால் தான் பெண்களின் மீது இத்தனை பாரபட்சமாக எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகப்பொருத்தம் என்பது சுயம் வரத்திர்கும், காதல் திருமணத்திற்கும் தேவையில்லையென்றும் இருக்கிறது. இதே புத்தகத்தில்.. ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளனர்.அது என்னவென்றால்.. சந்திரன், குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், அவர்களால் பார்க்கப்பட்டாலும் பெண்களுக்கும் கூட ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் பாதிப்புகிடையாது. இது தெரியாமல் பொதுமக்களும், ஜோதிடர்களும் , பெரியோர்களும் இது விசயத்தில் குழப்பம் செய்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கவேண்டாம்.. என்று இருக்கிறது..இதை எந்த ஜோதிடர்களும் கடைபிடிப்பதில்லை.. பெற்றோர்களுக்கு எடுத்து கூறுவதில்லை. வருகின்ற ஜாதகத்தையெல்லாம் தட்டிக்கழித்தால் தான் தங்களுக்கு பிழைப்பு என்பதால் தான் இப்படி செய்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதையறியாமல் பெண்களைப்பெற்றவர்களும், ஆண்களைப்பெற்றவர்களும் ஏமாறிக்கொண்டே இருக்கிறார்கள்..இணைய மேட்ரிமோனியலில் போய் பார்த்தால் சகல ஜாதிகளிலும் திருமணம் ஆகாமல் 25, 26,27 ,28 வயதிற்கு மேற்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள்.. தங்களுக்கு வரும் வரனுக்காக பல் வேறு நிபந்தனைகளுடன் காத்துக்கொண்டுள்ளனர்.. ஜோடிப்பொருத்தம் நன்றாக இருந்தால் நட்சத்திரப்பொருத்தம் இல்லை.. நட்சத்திரப்பொருத்தம் சரியாக இருந்தாலும் ராகு, கேது என்ற பாப கிரகங்கள் இருக்கிறது...எனவே... வேண்டாம்.. சரி.. ராகு/கேது.. இருவருக்குமே இருக்கிறது.. நட்சத்திரப்பொருத்தமும் இருக்கிறது.. ஆனால்.. பெண்ணிற்கு 7ல் செவ்வாய், 8ல் செவ்வாய் என ஜாதகம் ஒதுக்கப்படுகிறது..அப்பாடா ஒரு வழியாக நட்சத்திரம், ராகு, கேது, செவ்வாய் என அனைத்தும் பொருந்திவந்தாலும்....பையனுக்கு வருட வருமானம் நாங்கள் எதிர்பார்த்த பத்துலட்சமோ, ஒரு கோடியோ இல்லை...பையனுக்கு நல்ல வேலை, வீடு, என இருந்தாலும் விவசாய நிலம் இல்லை.. எனவே வேண்டாம்.. சொத்துபத்து இருந்தாலும்.. சம்பந்தி ஊர் தூரம்... நல்லது கெட்டதுக்கு எப்படி உடனே போவது.. எனவே.. அவரவர் ஊருக்கு அருகிலேயே பெண்ணோ, பையனோ இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.. இது மட்டுமா...பெண்ணின் படிப்பு அதிகம்... படியில்லை...பெண்ணின் உயரம் குறைவு, பெண் நிறம் கம்மி, என இப்படி பல்வேறு காரணங்களால் ஆணுக்கும், பெண்ணிற்குமான திருமணங்கள் தடைபட்டுக்கொண்டுள்ளன. சுகி சிவம் அவர்கள் தனது புத்தகம் ஒன்றில் , மூல நட்சத்திரப்பெண்கள் பலர் தங்கள் திருமணம் ஜோதிடத்தால் காலதாமதம் ஆவதைக்கண்டனர். இந்து மதத்தில் இருந்தால் தானே இந்த ஜோதிடம் எல்லாம்.. எனவே மதம் மாறி திருமணம் செய்து கொள்கின்றனர் எனப்பொருள்கொள்ளும்படி கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.. இது மூலத்திற்கு மட்டுமல்ல செவ்வாய் தோசம், ஆயில்யம், என தொடர்கிறது.. காதலையும், காதல் திருமணங்களையும், மத மாற்றத்தையும் எதிர்க்கும் இந்துத்வா வாதிகளும், ஆன்மீக குருக்களும் உண்மையில் ராடவேண்டியது இந்த ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் தான்.. ஜோதிடர்கள் மன்னிப்பார்களாக. ஆ.ஈசுவரன். திருப்பூர். 20-9-14 L•


Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..